#BOOMINEWS | விருதுநகர் ஊர் பொதுமக்கள் சார்பில் இமானுவேல் சேகரன் 64வது நினைவு தினபொங்கல் அனுசரிப்பு
விருதுநகர் ரோசல்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக தியாகி இமானுவேல் சேகரனின் 64 வது நினைவு தினத்தை ஒட்டி கொடியேற்றி பொங்கல் வைத்து அனுஷ்டித்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாண்டுரங்கன், கஜேந்திரன், காமாட்சி, பயில்வான் பாஸ்கரன், பொன்ராஜன், தாய் செல்வம், முனியாண்டி, வழக்கறிஞர் அருண்குமார், பழனிச்சாமி மற்றும் அனைத்து சமுதாய பெரியவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.